India
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வது ஏன்? : வல்லுநர்கள் கூறுவது என்ன?
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது.
இதையடுத்து மார்ச் 22ம் தேதியிலிருந்து மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து கடந்த ஏழு நாட்களில் மட்டும் ஆறு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்துள்ளது.
இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94க்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் அதிகரித்து ரூ.96க்கும் விற்பனையாகி வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் விலை உயர்த்து வருவது வாகன ஓட்டுகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.54, டீசல் விலை ரூ.4.57 அதிகரித்து,பெட்ரோல் விலை உயர்வுக்குச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக பா.ஜ.க கூறுகிறது.
ஆனால் உண்மையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மார்ச் 21ம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் டாலருக்கு 115.62க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று விலை குறைந்து டாலருக்கு 108.97க்கு விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தள்ளிப்போகும் வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?