India
மனைவியை அடித்துக் கொடுமைப் படுத்திய கணவன்.. தாயைக் காப்பாற்ற சிறுவன் செய்த விபரீத செயல் !
மும்பை காந்தி வலி கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சுக்ராம். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தினந்தோறும் பார்த்துவந்த அவரது மகன்கள் இரண்டு பேரும் தந்தை மீது கோபத்துடன் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டு மனைவியை அடித்துள்ளார்.
அப்போது, வீட்டிற்குள் வந்த இரண்டாவது மகன் தாயை அடிப்பதை நிறுத்தும்படி தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்துத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் அவரது மகனனே காவல்நிலையம் சென்று நடந்தவற்றைக் கூறி சரணடைந்துள்ளார். பிறகு போலிஸார் அவரது வீட்டிற்கு வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிறகு போலிஸாரிடம் சரணடைந்த சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகாததால் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். தாயை அடித்து கொடுமைப் படுத்தியதால் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!