India
சடலத்தை ஐஸ் கட்டியில் வைத்து பாதுகாக்கும் அவலம்.. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பிரீசர் பாக்ஸ் பழுதானதால், சடலங்களை ஐஸ் கட்டியில் வைத்து பாதுகாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுபாடு, ஸ்கேன் இயந்திரம் பழுது, ஆம்புலன்ஸ் வாகனம் பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ஏனாம் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் இருந்த குளிரூட்டு சாதனம் (பிரீசர் பாக்ஸ்) வெகு நாட்களுக்கு முன் பழுதடைந்தது.
அதனை சரி செய்யாததால், பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரும் சடலங்களை ஐஸ் கட்டியின் மீது வைத்து பாதுகாத்து வருகின்றனர். அரசு மருத்துவமனையின் இந்த அவல நிலை குறித்து, படத்துடன் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!