India
Microwave Oven-ல் சடலமாக கிடந்த 2 மாத பெண் குழந்தை.. கொலையா? : போலிஸ் தீவிர விசாரணை- நடந்தது என்ன?
டெல்லி போலிஸாருக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் வீட்டில் உள்ள மைக்ரோவேவ் ஓவனில் பெண் குழந்தை இறந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் உடனே அப்பகுதிக்குச் சென்றனர். பின்னர் குழந்தையின் உடலை மைக்ரோவேவ் அடுப்பில் இருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்தான் தகவல் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குழந்தையின் தாய் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல், குழந்தை உயிரிழந்த நேரத்தில் அவரது தந்தை அருகே இருக்கும் மளிகைக் கடைக்குச் சென்றுள்ளார். இதனால் போலிஸார் இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் தந்தையிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைக்ரோவேவ் ஓவனில் பெண் குழந்தை சடலமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !