India
Microwave Oven-ல் சடலமாக கிடந்த 2 மாத பெண் குழந்தை.. கொலையா? : போலிஸ் தீவிர விசாரணை- நடந்தது என்ன?
டெல்லி போலிஸாருக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் வீட்டில் உள்ள மைக்ரோவேவ் ஓவனில் பெண் குழந்தை இறந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் உடனே அப்பகுதிக்குச் சென்றனர். பின்னர் குழந்தையின் உடலை மைக்ரோவேவ் அடுப்பில் இருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்தான் தகவல் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குழந்தையின் தாய் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல், குழந்தை உயிரிழந்த நேரத்தில் அவரது தந்தை அருகே இருக்கும் மளிகைக் கடைக்குச் சென்றுள்ளார். இதனால் போலிஸார் இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் தந்தையிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைக்ரோவேவ் ஓவனில் பெண் குழந்தை சடலமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!