India
Microwave Oven-ல் சடலமாக கிடந்த 2 மாத பெண் குழந்தை.. கொலையா? : போலிஸ் தீவிர விசாரணை- நடந்தது என்ன?
டெல்லி போலிஸாருக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் வீட்டில் உள்ள மைக்ரோவேவ் ஓவனில் பெண் குழந்தை இறந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் உடனே அப்பகுதிக்குச் சென்றனர். பின்னர் குழந்தையின் உடலை மைக்ரோவேவ் அடுப்பில் இருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்தான் தகவல் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குழந்தையின் தாய் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல், குழந்தை உயிரிழந்த நேரத்தில் அவரது தந்தை அருகே இருக்கும் மளிகைக் கடைக்குச் சென்றுள்ளார். இதனால் போலிஸார் இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் தந்தையிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைக்ரோவேவ் ஓவனில் பெண் குழந்தை சடலமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!