India
துப்பாக்கியால் கர்ப்பிணி மனைவியை சுட்டு கொன்ற போலிஸ்.. மதுபோதையில் நடந்த கொடூரம் !
அசாம் மாநிலம், திப்ருகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிகி சேதியா. இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். பிகி சேதியா காவலர் என்பதால் இவர்கள் இருவரும் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
மேலும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த பிகி சேதியா பணிக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து கர்ப்பிணி மனைவியைச் சுட்டுள்ளார்.
திடீரென குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டு, பிகி சேதியா வீட்டிற்குச் சென்று பார்த்தப்போது அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரத்தவெள்ளத்தில் கிழே கிடந்த ஜெயஸ்ரீயை மீட்டு, அருகீல் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பிகி சேதியாவை கைது செய்தனர். மேலும் மது குடித்திருந்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!