India
ATM எந்திரத்தையே களவாடிய கும்பல்.. cctv கேமராவையும் திருடியதால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்துள்ளனர்.
இவர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. இதனால் ஏ.டி.எம் எந்திரத்தையே அந்த கும்பல் தூக்கிச் சென்றுள்ளது. மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும்யும், பதிவுகளையும் அவர்கள் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் வங்கி நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருடப்பட்ட ஏ.டி.எம் எந்திரத்தில் ரூ.25 லட்சம் பணம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அதேபோல் சி.சி.டி.வி கேமராக்ளை திருடர்கள் எடுத்துச் சென்றதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏ.டி.எம் இருந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
உங்களின் Favourite Destination தமிழ்நாடு : உலக மக்களுக்கு முதலமைச்சர் சொன்ன வேண்டுகோள்!
-
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன யோக்கியதை உண்டு? : பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நினைவூட்டிய முரசொலி!
-
“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் மதவாதத்தை வீழ்த்தும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!