India
ATM எந்திரத்தையே களவாடிய கும்பல்.. cctv கேமராவையும் திருடியதால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்துள்ளனர்.
இவர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. இதனால் ஏ.டி.எம் எந்திரத்தையே அந்த கும்பல் தூக்கிச் சென்றுள்ளது. மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும்யும், பதிவுகளையும் அவர்கள் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் வங்கி நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருடப்பட்ட ஏ.டி.எம் எந்திரத்தில் ரூ.25 லட்சம் பணம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அதேபோல் சி.சி.டி.வி கேமராக்ளை திருடர்கள் எடுத்துச் சென்றதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏ.டி.எம் இருந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!