India
ATM எந்திரத்தையே களவாடிய கும்பல்.. cctv கேமராவையும் திருடியதால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்துள்ளனர்.
இவர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. இதனால் ஏ.டி.எம் எந்திரத்தையே அந்த கும்பல் தூக்கிச் சென்றுள்ளது. மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும்யும், பதிவுகளையும் அவர்கள் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் வங்கி நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருடப்பட்ட ஏ.டி.எம் எந்திரத்தில் ரூ.25 லட்சம் பணம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அதேபோல் சி.சி.டி.வி கேமராக்ளை திருடர்கள் எடுத்துச் சென்றதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏ.டி.எம் இருந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!