India
வாங்கிய பணத்தை தர மறுத்ததால் ஆத்திரம்; சதக் சதக் என கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்; ஏனாமில் பயங்கரம்!
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ் (52). வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த நாராயணசுவாமி (32) என்பவரிடம் சீட்டு பணம் கட்டி வந்தார். வெங்கடேஸ்வர ராவ் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.6 லட்சம் சீட்டு பணம் வாங்கி உள்ளார். ஆனால் சீட்டு பணம் கட்டாமல் ஏமாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் நாராயணசாமி, வெங்கடேஸ்வராவ் வீட்டுக்கு சென்று சீட்டு பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேஸ்வர ராவை சரமாரியாக குத்தினார்.
படுகாயம் அடைந்த வெங்கடேஸ்வர ராவ் ஏனாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். ஏனாம் காவல்துறை ஆய்வாளர் அறிவுச்செல்வம் தலைமையிலான போலிஸார் கொலை வழக்கு பதிவு செய்து, நாராயணசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த கொடூர கொலை தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!