India
வாங்கிய பணத்தை தர மறுத்ததால் ஆத்திரம்; சதக் சதக் என கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்; ஏனாமில் பயங்கரம்!
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ் (52). வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த நாராயணசுவாமி (32) என்பவரிடம் சீட்டு பணம் கட்டி வந்தார். வெங்கடேஸ்வர ராவ் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.6 லட்சம் சீட்டு பணம் வாங்கி உள்ளார். ஆனால் சீட்டு பணம் கட்டாமல் ஏமாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் நாராயணசாமி, வெங்கடேஸ்வராவ் வீட்டுக்கு சென்று சீட்டு பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேஸ்வர ராவை சரமாரியாக குத்தினார்.
படுகாயம் அடைந்த வெங்கடேஸ்வர ராவ் ஏனாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். ஏனாம் காவல்துறை ஆய்வாளர் அறிவுச்செல்வம் தலைமையிலான போலிஸார் கொலை வழக்கு பதிவு செய்து, நாராயணசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த கொடூர கொலை தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Also Read
-
UPSC தேர்வில் பீடித்தொழிலாளி மகள் வெற்றி : இளைஞர்களுக்கு ஒளிவிளக்காக இருக்கும் நான் முதல்வன் திட்டம்!
-
”இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்து பொய் பேசும் மோடி” : ப.சிதம்பரம் கண்டனம்!
-
”மோடியின் பொருளாதாரக் கொள்கை அடிமைத்தனத்திற்கான பாதை” : பரகல பிரபாகர் கடும் தாக்கு!
-
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !