India
இதயத்தில் அடைப்பு.. வளர்ப்பு நாயின் உயிரை காப்பாற்றிய உரிமையாளர்: நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி!
மும்பையைச் சேர்ந்தவர் பிரத் திவாரி. அவர் தனது வீட்டில் ரோனி என்ற நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த நாய் சில நாட்களாக அடிக்கடி மயங்கி, மயங்கி விழுந்துள்ளது.
இதனால் நாயை கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிவந்து சிகிச்சையில் சேர்த்துள்ளார். அப்போது நாயை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது இதயத்தில் அடைப்பு இருந்தது தெரிந்தது.
உடனே நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து பேஸ்மேக்கர் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்கும் இல்லை என்றால் நாயை சில நாட்களிலேயே உயிரிழந்துவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நாய்தானே என திவாரி விட்டுவிடாமல் அறுவை சிகிச்சைக்கு அனுமதி கொடுத்துள்ளார். உடனே நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றி கரமாக பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது நாய் திவாரி வீட்டில் தொடர் சிகிச்சையிலிருந்து வருகிறது. சாதாரண நாய்தானே என விட்டு விடாமல் நாயின் உயிரை காப்பாற்றிய உரிமையாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!