India
இதயத்தில் அடைப்பு.. வளர்ப்பு நாயின் உயிரை காப்பாற்றிய உரிமையாளர்: நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி!
மும்பையைச் சேர்ந்தவர் பிரத் திவாரி. அவர் தனது வீட்டில் ரோனி என்ற நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த நாய் சில நாட்களாக அடிக்கடி மயங்கி, மயங்கி விழுந்துள்ளது.
இதனால் நாயை கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிவந்து சிகிச்சையில் சேர்த்துள்ளார். அப்போது நாயை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது இதயத்தில் அடைப்பு இருந்தது தெரிந்தது.
உடனே நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து பேஸ்மேக்கர் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்கும் இல்லை என்றால் நாயை சில நாட்களிலேயே உயிரிழந்துவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நாய்தானே என திவாரி விட்டுவிடாமல் அறுவை சிகிச்சைக்கு அனுமதி கொடுத்துள்ளார். உடனே நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றி கரமாக பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது நாய் திவாரி வீட்டில் தொடர் சிகிச்சையிலிருந்து வருகிறது. சாதாரண நாய்தானே என விட்டு விடாமல் நாயின் உயிரை காப்பாற்றிய உரிமையாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Also Read
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!