India

சிறுவன் கழுத்தறுத்து கொலை.. குற்றவாளியை உயிரோடு எரித்த கிராமம்: போலிஸார் ஷாக்!

அசாம் மாநிலத்திற்குட்பட்ட திப்ருஹர் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உஜ்ஜல் முரா என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சுனித் நந்தி என்பவர் தங்களுடைய நிலத்தில் ஏன் விளையாடுகிறாய் என கூறி சிறுவனைத் தாக்கியுள்ளார்.

மேலும் சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதையறிந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சுனித் வீட்டிற்கு வந்து அவரை அடித்துத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரை உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இரண்டு உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணை செய்ததில் தொழிலாளர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் ஒருவரை கூட இன்னும் கைது செய்யவில்லை.சிறுவனைக் கொலை செய்த குற்றவாளியை உயிரோடு கிராம மக்கள் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கொள்ளையடித்த ₹1 கோடியில், ₹1 லட்சத்தைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய திருட்டு கும்பல்: சிக்கியது எப்படி?