India
முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்த ‘குழந்தை’ - கோவாவில் நடந்தது என்ன?
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரை ஆம் ஆத்மி வேட்பாளரான கார் மெக்கானிக்கின் மகன் தோற்கடித்துள்ளார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பெனவுலிம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் சர்ச்சில் அலமாவ் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான கார் மெக்கானிக் மகன் வென்ஸி வீகாஸ் வெற்றி பெற்றார்.
பெனவுலிம் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்த சர்ச்சில், கோவாவில் காங்கிரஸ் ஆட்சியில் சில நாட்கள் முதலமைச்சராக இருந்தவர். இந்த முறை தேர்தலுக்கு முன்பாக சர்ச்சில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அவர் மீண்டும் அதே பெனவுலிம் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வென்ஸி வீகாஸை, “அவன் ஒரு குழந்தை” என விமர்சித்திருந்தார் சர்ச்சில்.
முன்னாள் முதலமைச்சரால் குழந்தை என விமர்சிக்கப்பட்டவர்தான் தற்போது அவரையே 1,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடியுள்ளார்.
சர்ச்சிலை தோற்கடித்த ஆம் ஆத்மியின் வென்ஸி பிரபலமடைந்துள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!