India
10 வயது மகளின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் நாடிய தாய்.. ’நாம் தலைகுனிய வேண்டும்’: கேரள நீதிமன்றம் வேதனை!
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் கருவைக் கலைக்க அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த சிறுமியின் தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் வயிற்றில் உள்ள கரு முழுமை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில்தான் தாய் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் அமர்வுக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, குழந்தை உயிருடன் பிறந்தால் அதைப் பேணி பாதுகாக்கும் பொறுப்பு, தற்போது சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையைச் சாரும்.
இது தொடர்பான முடிவு ஒருவாரத்திற்குள் மாநில சுகாதாரத்துறை தெரிவிக்க வேண்டும். சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரது தந்தையே காரணமாக இருப்பார் என்றால் இந்த சமூகம் வெட்கி தலைகுனிய வேண்டும். அந்த நபருக்கு நீதித்துறை கடுமையான தண்டனை வழங்கும் என உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
"ஆளுநர்கள் கால வரம்பு இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது" - தலைமை நீதிபதி கருத்து !
-
Twist வைத்த Bigg Boss; கதறி அழுத சாண்ட்ரா... BB வீட்டில் இருந்து வெளியேறும் பிரஜின்?
-
திட்டங்களால் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள்... திராவிட மாடல் ஆட்சியில் ஜொலிக்கும் பள்ளிக்கல்வித்துறை !
-
4 தென் மாவட்டங்களுக்கு Orange Alert.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... என்னென்ன பகுதிகள்? - விவரம்!
-
”முதலமைச்சருக்கு தாய்மார்கள் எப்போதுமே பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...” -துணை முதலமைச்சர்!