India
10 வயது மகளின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் நாடிய தாய்.. ’நாம் தலைகுனிய வேண்டும்’: கேரள நீதிமன்றம் வேதனை!
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் கருவைக் கலைக்க அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த சிறுமியின் தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் வயிற்றில் உள்ள கரு முழுமை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில்தான் தாய் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் அமர்வுக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, குழந்தை உயிருடன் பிறந்தால் அதைப் பேணி பாதுகாக்கும் பொறுப்பு, தற்போது சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையைச் சாரும்.
இது தொடர்பான முடிவு ஒருவாரத்திற்குள் மாநில சுகாதாரத்துறை தெரிவிக்க வேண்டும். சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரது தந்தையே காரணமாக இருப்பார் என்றால் இந்த சமூகம் வெட்கி தலைகுனிய வேண்டும். அந்த நபருக்கு நீதித்துறை கடுமையான தண்டனை வழங்கும் என உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!