India
காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள்.. கம்பி எண்ணவைத்த போலிஸ் - நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் நேற்று மாலை கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென இவர்களுடன் தகராறு செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து தனது காதலியை அந்த இரண்டு பேரிடம் இருந்து காதலன் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அந்த இருவரும் அவரைத் தாக்கி கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் காதலன் கண்முன்னே, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் தனது சகோதரனுக்கு செல்பேசியில் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே கடற்கரைக்கு வந்து இருவரையும் மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றார். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்த நாகபாபுவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!