India
உத்தரகாண்டில் ஆட்சியைப் பறிகொடுக்கும் பா.ஜ.க... வெல்லப்போது யார்? - Exit Polls சொல்வது என்ன?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 33-35 இடங்களைப் பிடிக்கும் என நியூஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், உத்தர பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 632 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நியூஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 33-35 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க 31-33 இடங்களும், ஆம் ஆத்மி 0-3 இடங்களும், இதர கட்சிகள் 0-2 இடங்களைப் பிடிக்கும் என்றும் நியூஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பின்படி காங்கிரஸ் 33-38 இடங்களிலும், பா.ஜ.க 29-34 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசைன்பாக்ஸ்டு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 35-40 இடங்களிலும், பா.ஜ.க 26-30 இடங்களிலும் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 32-38 இடங்களிலும், பா.ஜ.க 26-32 இடங்களிலும் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 37 இடங்களில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!