India
LOOPல் பாட்டு போட்டதால் ஆத்திரம்: சமாதானம் செய்ய முற்பட்ட இளைஞன் அடித்துக்கொலை; உ.பியில் நடந்த பகீர்!
இந்தியாவில் வட மாநிலங்களில் திருமண நிகழ்ச்சியின் போது பாட்டு, கச்சேரி, நடனம் என பல கலை நிகழ்ச்சிகளை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால் அண்மை காலங்களாக அம்மாதிரியான திருமண கொண்டாட்டங்களின் போது பல அசம்பாவிதங்கள் நடைபெறுவதும் வழக்கமாகி வருகிறது.
அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்புர் கேரியில் நடந்த திருமணத்தின் போது பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டிருக்கிறார்.
கமாரியா என்ற கிராமத்தில் கடந்த வெள்ளியன்று இரவு விவசாயி மகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த DJவிடம் ஒரே பாடலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பச் சொல்லி விருந்தினர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
இது பிற விருந்தினர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சிலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அவர்களை சமாதானம் செய்ய முற்பட்ட வீரு லால் என்ற 23 வயது இளைஞன் அந்த தகராறின் போது கட்டையால் தாக்கப்பட்டிருக்கிறார். இதனால் சுயநினைவை இழந்து மயங்கிய அந்த இளைஞனை சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் மூன்று பேரை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!