India
பெண்களுடன் பொழுதை கழிக்க கொள்ளையனாக மாறிய முதியவர்.. திருடர் குல திலகம் சிக்கியது எப்படி?
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள லே அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதியவர் ஒருவர் பூட்டிய வீட்டிலிருந்து வெளியே செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.
பின்னர் அந்த முதியவரை போலிஸார் தேடிவந்த நிலையில் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கைதான முதியவர் பெயர் ரமேஷ். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதையடுத்து மூன்றாவதாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது மனைவிகள் முதியவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதையடுத்து சொகுசாக வாழ ஆசைப்பட்டுப் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நகை மற்றும் பணங்களை திருடி வந்துள்ளார். இந்த பணத்தில் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவந்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டிலும் இதுபோன்று கொள்ளை அடித்துவந்துள்ளார். இது தொடர்பாக அவரை நான்கு முறை போலிஸார் அவரை கைது செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான் பெங்களூருவில் கொள்ளையடித்து வந்தநிலையில் போலிஸாரிடம் முதியவர் சிக்கியுள்ளார்.
Also Read
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
-
முதலீடுகள் விவகாரம் : திமுக மீது பொய் பழி.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆந்திர அமைச்சர் கொடுத்த பதிலடி என்ன?
-
நடிகர் ரவி மோகன் வீட்டில் வைரச் சங்கிலி திருட்டு : காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்!
-
“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!