India
பெண்களுடன் பொழுதை கழிக்க கொள்ளையனாக மாறிய முதியவர்.. திருடர் குல திலகம் சிக்கியது எப்படி?
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள லே அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதியவர் ஒருவர் பூட்டிய வீட்டிலிருந்து வெளியே செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.
பின்னர் அந்த முதியவரை போலிஸார் தேடிவந்த நிலையில் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கைதான முதியவர் பெயர் ரமேஷ். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதையடுத்து மூன்றாவதாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது மனைவிகள் முதியவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதையடுத்து சொகுசாக வாழ ஆசைப்பட்டுப் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நகை மற்றும் பணங்களை திருடி வந்துள்ளார். இந்த பணத்தில் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவந்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டிலும் இதுபோன்று கொள்ளை அடித்துவந்துள்ளார். இது தொடர்பாக அவரை நான்கு முறை போலிஸார் அவரை கைது செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான் பெங்களூருவில் கொள்ளையடித்து வந்தநிலையில் போலிஸாரிடம் முதியவர் சிக்கியுள்ளார்.
Also Read
-
“‘முடிந்துவிட்டது’ என்றுதான் சொன்னேன், அது இன்றைக்கு பெரிய வைரலாகிவிட்டது!” : முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின்!
-
ரூ.6 கோடி மதிப்பீட்டில் ‘மதுரை ஒலிம்பிக் அகாடமி’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதி செய்த கரந்தை தமிழ்ச் சங்கம்!” : துணை முதல்வர் உதயநிதி உரை!
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!