India

பெண் போலிஸார் முன் சட்டையைக் கழற்றி சேட்டை.. வாலிபருக்கு தக்கபாடம் புகட்டிய நீதிமன்றம்!

மும்பையைச் சேர்ந்தவர் கணேஷ் கார்வா. இவர் கடந்த 2016ம் ஆண்டு பாபு கார்வா என்பவருடன் சாலையில் தகராறு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த போலிஸார் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

அங்கு போலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் காவலர்கள் முன்பு சட்டையைக் கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார்.இதனால், காவல்நிலையத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி அவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எஸ்.ஆர்.நர்வாடே, காவல்நிலையத்தில் பெண் போலிஸார் முன்பு சட்டையைக் கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்ட கணேஷ் கார்வாவுக்கு 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலிஸார் கணேஷ் கார்வாவை போலிஸார் சிறையில் அடைத்தனர்.

Also Read: ரூ.100க்காக சக ஊழியனை கட்டையால் அடித்துக் கொன்ற போதை ஆசாமி : மும்பையில் நடந்த பகீர் சம்பவம்!