India
ரூ.100க்காக சக ஊழியனை கட்டையால் அடித்துக் கொன்ற போதை ஆசாமி : மும்பையில் நடந்த பகீர் சம்பவம்!
ராஜஸ்தானை சேர்ந்த 35 வயதான அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹர் என்பவர் மும்பையில் உள்ள கிர்கவும் பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார்.
அர்ஜுனுடன் பணியாற்றும் மனோஜ் மரஜ்கோலிடம் (36) 100 ரூபாய் கடனாக பெற்றிருந்தார். கடந்த வியாழக்கிழமை இரவன்று இருவரும் குடிபோதையில் இருந்தபோது 100 ரூபாயை திருப்பித் தருவது தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது.
பின்னர் மாதவ் பவன் அருகே அர்ஜூன் தூங்கிக் கொண்டிருந்த போது சிமெண்ட் கட்டையால் அவரது மண்டையை அடித்திருக்கிறார் மனோஜ் மரஜ்கோல்.
இதில் அர்ஜூன் யஷ்வந்த் சிங் சர்ஹார் இறந்திருக்கிறார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை (பிப்.,05) நடந்திருக்கிறது. இதனையடுத்து அந்த இடத்தை விட்டு தப்பியோடிய மனோஜை அடுத்த 2 மணிநேரத்தில் வி.பி.சாலை போலிஸார் கைது செய்து எதிர்வரும் செவ்வாய் வரை போலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
100 ரூபாயை திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கும் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!