India
ரூ.100க்காக சக ஊழியனை கட்டையால் அடித்துக் கொன்ற போதை ஆசாமி : மும்பையில் நடந்த பகீர் சம்பவம்!
ராஜஸ்தானை சேர்ந்த 35 வயதான அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹர் என்பவர் மும்பையில் உள்ள கிர்கவும் பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார்.
அர்ஜுனுடன் பணியாற்றும் மனோஜ் மரஜ்கோலிடம் (36) 100 ரூபாய் கடனாக பெற்றிருந்தார். கடந்த வியாழக்கிழமை இரவன்று இருவரும் குடிபோதையில் இருந்தபோது 100 ரூபாயை திருப்பித் தருவது தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது.
பின்னர் மாதவ் பவன் அருகே அர்ஜூன் தூங்கிக் கொண்டிருந்த போது சிமெண்ட் கட்டையால் அவரது மண்டையை அடித்திருக்கிறார் மனோஜ் மரஜ்கோல்.
இதில் அர்ஜூன் யஷ்வந்த் சிங் சர்ஹார் இறந்திருக்கிறார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை (பிப்.,05) நடந்திருக்கிறது. இதனையடுத்து அந்த இடத்தை விட்டு தப்பியோடிய மனோஜை அடுத்த 2 மணிநேரத்தில் வி.பி.சாலை போலிஸார் கைது செய்து எதிர்வரும் செவ்வாய் வரை போலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
100 ரூபாயை திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கும் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! : ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன்!
-
கொள்கைத் தலைவர் பெரியார்.. ஆனால் பெரியார் திடலில் போலீஸ் குவிப்பு.. விஜய்க்கு ஏன் பதற்றம்? : முரசொலி!