India
வீட்டை ஜப்தி செய்திடுவோம்.. வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் விபரீத முடிவெடுத்த ஆட்டோ ஓட்டுநர்!
கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த நல்லன்கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 2014ம் ஆண்டு மகனின் திருமணத்திற்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
பின்னர் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியுள்ளார். பிறகு இவரால் சரியாகப் பணம் கட்ட முடியவில்லை. இதனால் பலமுறை வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
மேலும் வாங்கிய கடனுக்காக வட்டியும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் விஜயன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.இந்நிலையில் மீண்டும் சில நாட்களுக்கு முன்பு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
இதில், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து ரூ. 10 லட்சத்தைக் கட்டவில்லை என்றால் உங்கள் வீடு ஜப்தி செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்க பதிவு செய்து சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்