India
வாக்காளர்களுக்கு மிரட்டல் .. பா.ஜ.க வேட்பாளருக்கு தடை விதித்த இந்திய தேர்தல் ஆணையம்!
உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தை அடுத்து முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக இன்று வாக்குபாதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று வாக்காளர்களை மிரட்டிய பாஜக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. தடைவிதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் திலோய் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மயேங்கேஷ்வர் சரண்சிங் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது, இந்தியாவில் வாழவேண்டும் என்றால் ராதே ராதே என்று முழக்கமிட வேண்டும். இல்லை என்றால் நாடு பிரிந்தபோது பாக்கிஸ்தானுக்குச் சென்றவர்களைப் போல் நீங்களும் போகலாம். இந்தியாவில் இருக்கத் தேவை இல்லை என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்ததை அடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் விதிமீறல் என்று கூறி நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேரத்துக்கு எந்தவகையான தேர்தல் பிரச்சாரமும் செய்யக்கூடாது என கூறி மயேங்கேஷ்வர் சரண்சிங்கிற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
Also Read
-
இறந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் அந்த மனசு இருக்கே... தானமாக வழங்கப்பட்ட தோழர் நல்லகண்ணுவின் உடல்!
-
ரூ.175 கோடியில் 22 புதிய திட்டப் பணிகள்: எந்த மாவட்டத்தில் என்னென்ன பணிகளை தொடங்கி வைத்தார் CM MK Stalin!
-
3 மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்: ரூ.117.65 கோடியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திருவான்மியூர் TO உத்தண்டி - 13.30 கி.மீ நீளத்திற்கு ரூ.2100 கோடியில் மேம்பாலம் : அடிக்கல் நாட்டிய CM!
-
“திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்” : அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!