India
வாக்காளர்களுக்கு மிரட்டல் .. பா.ஜ.க வேட்பாளருக்கு தடை விதித்த இந்திய தேர்தல் ஆணையம்!
உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தை அடுத்து முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக இன்று வாக்குபாதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று வாக்காளர்களை மிரட்டிய பாஜக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. தடைவிதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் திலோய் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மயேங்கேஷ்வர் சரண்சிங் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது, இந்தியாவில் வாழவேண்டும் என்றால் ராதே ராதே என்று முழக்கமிட வேண்டும். இல்லை என்றால் நாடு பிரிந்தபோது பாக்கிஸ்தானுக்குச் சென்றவர்களைப் போல் நீங்களும் போகலாம். இந்தியாவில் இருக்கத் தேவை இல்லை என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்ததை அடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் விதிமீறல் என்று கூறி நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேரத்துக்கு எந்தவகையான தேர்தல் பிரச்சாரமும் செய்யக்கூடாது என கூறி மயேங்கேஷ்வர் சரண்சிங்கிற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!