India
வாடகைக்கு கார் எடுத்து ஓட்டுநர்கள் கொலை.. மர்ம ‘கும்பல்’ போலிஸில் சிக்கியது எப்படி?
ஹரியானா மாநிலத்திற்குட்பட்ட குருகிராம் பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவரை கொலை செய்து விட்டு அவரது காரை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலிஸார் கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த கும்பல் வாடகைக்குக் காரை எடுத்துக்கொண்டு ஆள்நடமாட்டமே இல்லாத பகுதிக்குச் சென்ற பிறகு காரின் ஓட்டுநரை அடித்துக் கொலை செய்துவிட்டு, காரை கொள்ளைடியத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இதுபோன்று இந்த கும்பல் கார்களை கொள்ளையடித்து வந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விஷால், அவரது காதலி ரேகா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த விநோத், ஜிது, ரவி, ராகுல் ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல்தான் இந்த தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கும்பல் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!