India
புதுவைக்கு சுற்றுலா வந்தவர் கடல் அலையில் சிக்கி பலி; நண்பர்கள் காப்பாற்றியும் பலனளிக்காததால் பரிதாபம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில், தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் 8 இளைஞர்கள் நேற்று புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், இன்று கடற்கரையை சுற்றி பார்த்தனர். இதில் மனோஜ், கார்த்திக், விநாயக், சிவா ஆகிய நான்கு இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது விநாயக் (26) கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் விநாயக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து இது குறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விநாயகத்திற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த விநாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியக்கடை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா வந்த இளைஞர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரையும் மாற்றும் த.வெ.க! : பெயர் மாற்றி ‘ஏமாற்றும்’ அவலம்!
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!