India
”ராணுவத்துலயாச்சும் வேலைக்கு ஆட்களை எடுங்க” - ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் கோஷமிட்ட உ.பி. இளைஞர்கள்!
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் கோண்டா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நாட்டில் வேலைவாய்பில்லை. ராணுவத்தில் மூன்று ஆண்டுகளாக ஆள் சேர்ப்பு இல்லை என்று இளைஞர்கள் கோஷமிட்டனர்.
மேலும் எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள் எனவும் கோஷமிட்டனர். இதனால் ராஜ்நாத் சிங் தனது பேச்சை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
கொரோனா காரணமாக ஆள் சேர்ப்பு நடைபெறவில்லை என்று கூறிய ராஜ்நாத் சிங் விரைவில் மீண்டும் ஆள் சேர்ப்பு தொடங்கப்படும் என்று கோஷமிட்டவர்களை சமாதானம் செய்தார். அதன் பின்னரே இளைஞர்கள் அமைதியாகினர். இதனால் சில நிமிடங்கள் பிரசாரம் தடைபட்டது.
இதனிடையே நாளை (பிப்ரவரி 20) உத்தர பிரதேசத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு 16 மாவட்டங்களில் 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !