India
”ராணுவத்துலயாச்சும் வேலைக்கு ஆட்களை எடுங்க” - ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் கோஷமிட்ட உ.பி. இளைஞர்கள்!
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் கோண்டா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நாட்டில் வேலைவாய்பில்லை. ராணுவத்தில் மூன்று ஆண்டுகளாக ஆள் சேர்ப்பு இல்லை என்று இளைஞர்கள் கோஷமிட்டனர்.
மேலும் எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள் எனவும் கோஷமிட்டனர். இதனால் ராஜ்நாத் சிங் தனது பேச்சை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
கொரோனா காரணமாக ஆள் சேர்ப்பு நடைபெறவில்லை என்று கூறிய ராஜ்நாத் சிங் விரைவில் மீண்டும் ஆள் சேர்ப்பு தொடங்கப்படும் என்று கோஷமிட்டவர்களை சமாதானம் செய்தார். அதன் பின்னரே இளைஞர்கள் அமைதியாகினர். இதனால் சில நிமிடங்கள் பிரசாரம் தடைபட்டது.
இதனிடையே நாளை (பிப்ரவரி 20) உத்தர பிரதேசத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு 16 மாவட்டங்களில் 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!