India
”ராணுவத்துலயாச்சும் வேலைக்கு ஆட்களை எடுங்க” - ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் கோஷமிட்ட உ.பி. இளைஞர்கள்!
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் கோண்டா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நாட்டில் வேலைவாய்பில்லை. ராணுவத்தில் மூன்று ஆண்டுகளாக ஆள் சேர்ப்பு இல்லை என்று இளைஞர்கள் கோஷமிட்டனர்.
மேலும் எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள் எனவும் கோஷமிட்டனர். இதனால் ராஜ்நாத் சிங் தனது பேச்சை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
கொரோனா காரணமாக ஆள் சேர்ப்பு நடைபெறவில்லை என்று கூறிய ராஜ்நாத் சிங் விரைவில் மீண்டும் ஆள் சேர்ப்பு தொடங்கப்படும் என்று கோஷமிட்டவர்களை சமாதானம் செய்தார். அதன் பின்னரே இளைஞர்கள் அமைதியாகினர். இதனால் சில நிமிடங்கள் பிரசாரம் தடைபட்டது.
இதனிடையே நாளை (பிப்ரவரி 20) உத்தர பிரதேசத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு 16 மாவட்டங்களில் 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மூடப்பட்ட 5 அரசுப்பள்ளிகள்.. சேர்க்கை இல்லை என காரணம் கூறிய அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை!
-
‘டெல்லிக்கு அடிபணியும் தவெக அரசு… முதுகெலும்பற்ற கோழை முதல்வர் விஜய்’ : திமுக IT Wing கடும் விமர்சனம்!
-
CSK-விலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்.. பிரிந்த 18 ஆண்டுகால கூட்டணி.. அடுத்த பயிற்சியாளர் யார்?
-
விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால்... : ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
-
தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத... : பூமணி மறைவுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!