India
“My role model கோட்சே”: பள்ளி மாணவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் வகையில் பேச்சுப்போட்டி-குஜராத் கொடூரம்!
குஜராத் மாநிலம் வல்வாத் பகுதியில் உள்ள பள்ளிகளில் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த பேச்சுப் போட்டியில், “மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே ( “My role model Nathuram Godse”)” என்ற தலைப்பு உள்ளிட்ட 3 தலைப்புகளின் கீழ் பேச்சுப் போட்டி நடந்துள்ளது.
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவைக் கொண்டாடும் வகையில், “மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே” என தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இந்த தலைப்பு தொடர்பாக காந்தி நகரில் உள்ள கலாசாரத்துறை உயரதிகாரிகளிடம் இருந்து விசாரணை நடத்த உத்தரவு வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த தலைப்பின் கீழ் போட்டி நடத்த உத்தரவிட்ட வல்சால் மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரி மிதாபென் கவ்லி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்துத்வா கும்பல்கள் இதுபோல மதவெறியை புகுத்துவதைக் கண்காணிக்கவேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!