India
“My role model கோட்சே”: பள்ளி மாணவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் வகையில் பேச்சுப்போட்டி-குஜராத் கொடூரம்!
குஜராத் மாநிலம் வல்வாத் பகுதியில் உள்ள பள்ளிகளில் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த பேச்சுப் போட்டியில், “மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே ( “My role model Nathuram Godse”)” என்ற தலைப்பு உள்ளிட்ட 3 தலைப்புகளின் கீழ் பேச்சுப் போட்டி நடந்துள்ளது.
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவைக் கொண்டாடும் வகையில், “மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே” என தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இந்த தலைப்பு தொடர்பாக காந்தி நகரில் உள்ள கலாசாரத்துறை உயரதிகாரிகளிடம் இருந்து விசாரணை நடத்த உத்தரவு வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த தலைப்பின் கீழ் போட்டி நடத்த உத்தரவிட்ட வல்சால் மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரி மிதாபென் கவ்லி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்துத்வா கும்பல்கள் இதுபோல மதவெறியை புகுத்துவதைக் கண்காணிக்கவேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!