India
WhatsApp Status வைத்ததால் நடந்த கொடூரம்.. இளம் பெண்ணின் அம்மா அடித்துக் கொலை : நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பிரீத்தி பிரசாத். இளம் பெண்ணான இவர் தனது செல்போனில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்துள்ளார். இதைப்பார்த்த அவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண், தன்னை இழிவுபடுத்தித்தான் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாக நினைத்துள்ளார்.
பின்னர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணும் அவரது பெற்றோரும் பிரீத்தி பிரசாத் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பிரீத்தி அவரது தாய் லீலாவதி ஆகிய இரண்டு பேரையும் அவர்கள் குடும்பமாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதில் கீழே விழுந்ததில் லீலாவதிக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம் பெண், அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!