India
WhatsApp Status வைத்ததால் நடந்த கொடூரம்.. இளம் பெண்ணின் அம்மா அடித்துக் கொலை : நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பிரீத்தி பிரசாத். இளம் பெண்ணான இவர் தனது செல்போனில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்துள்ளார். இதைப்பார்த்த அவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண், தன்னை இழிவுபடுத்தித்தான் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாக நினைத்துள்ளார்.
பின்னர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணும் அவரது பெற்றோரும் பிரீத்தி பிரசாத் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பிரீத்தி அவரது தாய் லீலாவதி ஆகிய இரண்டு பேரையும் அவர்கள் குடும்பமாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதில் கீழே விழுந்ததில் லீலாவதிக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம் பெண், அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!