India
வாடகை கேட்ட HOUSE OWNER.. அரிவாளால் வெட்டிய குடும்பம்: கேரளாவில் நடந்தது என்ன?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட உப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சன்னி. இவருக்குச் சொந்தமான வீட்டில் குஞ்சமோன் ஜார்ஜ், அவரது மகன் சஞ்சு ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வாடகை பணம் தராமல் இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் சன்னி, அவர்களிடம் 'வாடகை கொடுங்க, இல்ல வீட்டை பூட்டி சாவியை கொடுங்கள்' என கூறியுள்ளார்.
இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. பின்னர் ஆத்திரத்தில் சுஞ்சுமோன் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து கத்தியால் சன்னியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து குஞ்சுமோன் ஜார்த், சஞ்சு, உறவினர் பென்னி ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !