India
கல்யாணத்தை நிறுத்த இப்படி ஒரு காரணமா? மணமகளின் முடிவால் அதிர்ச்சியில் திருமண வீட்டார்; உ.பியில் பரபரப்பு!
மணமகனின் செயலால் அதிருப்திக்கும் கோபத்துக்கும் ஆளான மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆவ்ரையா மாவட்டத்தில் நடந்திருக்கிறது.
பிதுனா கொட்வாலியில் உள்ள நவீன் பஸ்தி பகுதியில் திருமண நிகழ்வு நடந்திருக்கிறது. அப்போது வரமாலை என்ற சடங்கின் போது மணப்பெண்ணுக்கு மாலை போடும் நிகழ்வின் போது மாப்பிள்ளை மாலையை பெண்ணின் கழுத்தின் மீது போடாமல் அதனை தூக்கி எறிந்திருக்கிறாராம்.
இதனால் கடுப்பான மணமகள் மணமகனை திருமணம் செய்துக்கொள்ள பிடிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும் முதலில் பெண்ணை சமாதானம் செய்திருக்கிறார்கள். மணமகனும் தான் அவ்வாறு மாலையை வீச எறியவில்லை எனக் கூறியிருக்கிறார்.
இருப்பினும் தனது முடிவில் பெண் உறுதியாக இருந்திருக்கிறார். இதன் காரணமாக இரு வீட்டாரிடையே வாக்குவாதம் நீடித்திருக்கிறது. இதனையடுத்து போலிஸை வரவைத்து இந்த விவகாரத்துக்கு முடிவுக்கட்ட முற்பட்டிருக்கிறார்கள்.
இதனையடுத்து இரு வீட்டாரும் தத்தம் கொடுத்த பொருட்களை திரும்பி பெற்றுக்கொண்டு திருமணத்தை நிறுத்தி கலைந்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் திருமணத்துக்கு வந்த உறவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!