India
சானிடைசர் ஊற்றி குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை: காரணம் என்ன?
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ராவத். இவரது மனைவி சுவர்ணா ரமாவத். இந்த தம்பதிக்கு ஏழு மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக வெங்கடேஷ் ராவத் வேலை இல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பணப் பிரச்சனை எழுந்துள்ளது. இதன்காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 11ம் தேதி மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த வெங்கடேஷ் ராவத் வீட்டிலிருந்து பாட்டிலை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
அப்போது, மனவேதனையிலிருந்த மனைவி சுவர்ணா குழந்தையுடன் சேர்ந்து சானிடைசர் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை செய்யப்பட்டு வந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 70 % தீக்காயங்களுடன் சுவர்ணா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!