India
சானிடைசர் ஊற்றி குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை: காரணம் என்ன?
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ராவத். இவரது மனைவி சுவர்ணா ரமாவத். இந்த தம்பதிக்கு ஏழு மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக வெங்கடேஷ் ராவத் வேலை இல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பணப் பிரச்சனை எழுந்துள்ளது. இதன்காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 11ம் தேதி மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த வெங்கடேஷ் ராவத் வீட்டிலிருந்து பாட்டிலை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
அப்போது, மனவேதனையிலிருந்த மனைவி சுவர்ணா குழந்தையுடன் சேர்ந்து சானிடைசர் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை செய்யப்பட்டு வந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 70 % தீக்காயங்களுடன் சுவர்ணா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!