India
சானிடைசர் ஊற்றி குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை: காரணம் என்ன?
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ராவத். இவரது மனைவி சுவர்ணா ரமாவத். இந்த தம்பதிக்கு ஏழு மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக வெங்கடேஷ் ராவத் வேலை இல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பணப் பிரச்சனை எழுந்துள்ளது. இதன்காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 11ம் தேதி மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த வெங்கடேஷ் ராவத் வீட்டிலிருந்து பாட்டிலை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
அப்போது, மனவேதனையிலிருந்த மனைவி சுவர்ணா குழந்தையுடன் சேர்ந்து சானிடைசர் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை செய்யப்பட்டு வந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 70 % தீக்காயங்களுடன் சுவர்ணா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!