India

20 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து.. இருவர் பலி... மீட்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!

மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 13 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மும்பையின் டார்டியோவில் உள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் 20 மாடிகள் கொண்ட கமலா கட்டடத்தின் 18வது மாடியில் இன்று காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தில் தீப்பிடித்ததை அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 13 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாட்டியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கடுமையான தீக்காயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தீ கட்டுக்குள் உள்ளது ஆனால் புகை அதிகமாக உள்ளது என்றும் மக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

Also Read: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா... இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு!