India
20 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து.. இருவர் பலி... மீட்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!
மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 13 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மும்பையின் டார்டியோவில் உள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் 20 மாடிகள் கொண்ட கமலா கட்டடத்தின் 18வது மாடியில் இன்று காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தில் தீப்பிடித்ததை அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 13 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாட்டியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கடுமையான தீக்காயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தீ கட்டுக்குள் உள்ளது ஆனால் புகை அதிகமாக உள்ளது என்றும் மக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!