India
BMTC பேருந்தில் திடீர் தீ விபத்து; 40 பயணிகள் உயிர் பிழைத்தது எப்படி? பெங்களூரில் நடு ரோட்டில் பரபரப்பு!
பெங்களூரு சாமராஜ பேட்டை பகுதியில் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பி.எம்.டி.சி பேருந்து சென்றபோது இன்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மெஜஸ்டிக்கில் இருந்து தீபாஞ்சலிநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென புகை கிளம்பியிருக்கிறது. உஷாரான ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்த 40க்கு மேற்பட்ட பயணிகளை கீழே இறக்கினார்.
இன்ஜினில் பற்றிய தீ பேருந்து முழுவதும் பரவியதால் பேருந்து எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!