India
ரத்தம் சொட்ட சொட்ட கணவனின் தலையுடன் உலா வந்த மனைவி; பீதியில் ஆழ்ந்த மக்கள் - ரேனிகுண்டாவில் பரபரப்பு!
சித்தூரில் உள்ள ரேனிகுண்டாவின் பக்கா வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). அவரது மனைவி வசுந்த்ரா (50). இந்த தம்பதிக்கு 20 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் இருக்கிறார்.
கணவன் மனைவி இடையே அண்மைக்காலமாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இந்நிலையில் இன்று மீண்டும் இவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் போய் முடிந்திருக்கிறது.
அதன்படி ரவிச்சந்திரனின் கழுத்தை அறுத்துள்ள வசுந்த்ரா ரத்தம் சொட்ட சொட்ட கணவரின் தலையை பையில் போட்டுக் கொண்டு பொது வெளியில் சென்றிருக்கிறார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் உடனடியாக விரைந்த போலிஸார் வசுந்த்ராவை கைது செய்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக வசுந்த்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!