India
ரத்தம் சொட்ட சொட்ட கணவனின் தலையுடன் உலா வந்த மனைவி; பீதியில் ஆழ்ந்த மக்கள் - ரேனிகுண்டாவில் பரபரப்பு!
சித்தூரில் உள்ள ரேனிகுண்டாவின் பக்கா வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). அவரது மனைவி வசுந்த்ரா (50). இந்த தம்பதிக்கு 20 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் இருக்கிறார்.
கணவன் மனைவி இடையே அண்மைக்காலமாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இந்நிலையில் இன்று மீண்டும் இவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் போய் முடிந்திருக்கிறது.
அதன்படி ரவிச்சந்திரனின் கழுத்தை அறுத்துள்ள வசுந்த்ரா ரத்தம் சொட்ட சொட்ட கணவரின் தலையை பையில் போட்டுக் கொண்டு பொது வெளியில் சென்றிருக்கிறார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் உடனடியாக விரைந்த போலிஸார் வசுந்த்ராவை கைது செய்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக வசுந்த்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!