India
ரத்தம் சொட்ட சொட்ட கணவனின் தலையுடன் உலா வந்த மனைவி; பீதியில் ஆழ்ந்த மக்கள் - ரேனிகுண்டாவில் பரபரப்பு!
சித்தூரில் உள்ள ரேனிகுண்டாவின் பக்கா வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). அவரது மனைவி வசுந்த்ரா (50). இந்த தம்பதிக்கு 20 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் இருக்கிறார்.
கணவன் மனைவி இடையே அண்மைக்காலமாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இந்நிலையில் இன்று மீண்டும் இவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் போய் முடிந்திருக்கிறது.
அதன்படி ரவிச்சந்திரனின் கழுத்தை அறுத்துள்ள வசுந்த்ரா ரத்தம் சொட்ட சொட்ட கணவரின் தலையை பையில் போட்டுக் கொண்டு பொது வெளியில் சென்றிருக்கிறார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் உடனடியாக விரைந்த போலிஸார் வசுந்த்ராவை கைது செய்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக வசுந்த்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!