India
“பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம்” : கயிற்றைப் பிடித்து மேலேறி உயிர்தப்பிய சிறுமி!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்வெளி பக்கம் சென்றபோது அந்தச் சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக சிறுமியை அருகில் இருந்த கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சிறுமி கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து அந்த நபர் தப்பியுள்ளார்.
கிணற்றில் விழுந்த சிறுமி கிணற்றிலிருந்த கம்பியைப் பிடித்து உயிர் தப்பியுள்ளார். அந்த கம்பியைப் பிடித்து கிணற்றின் மேலேறி வந்த சிறுமி வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலிஸில் புகாரளித்தனர். சிறுமியின் பெற்றோரின் புகாரின் பேரில் போலிஸார் அந்த குற்றவாளியை நேற்று கைது செய்தனர்.
அந்த நபர் மீது மேல் கற்பழிப்பு மற்றும் குழந்தை வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!