India
ஜன.,31 துக்க நாள் ; பிப்.,1 முதல் மிஷன் உ.பி. : மீண்டும் போராட்டத்தில் இறங்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு
வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க அரசுக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 முதல் மிஷன் உ.பி எனும் பெயரில் பாஜகவின் பொய் வாக்குறுதிகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரங்களைத்தொடங்கவும், ஒன்றிய அமைச்சரை நீக்காததைக் கண்டித்து லக்கிம்பூர் கேரியில் காலவரையறையற்ற போராட்டத்தை தொடங்கப் போவதாகவும் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்ற பிறகு குறைந்த பட்ச ஆதார விலை வழங்குவது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை. வழக்குகள் கைவிடப்படவில்லை. உயிரிழந்தோருக்கு நிவாரணம் தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
லக்கிம்பூர் கொலையில் தொடர்புடைய அமைச்சர் தற்போதும் மோடி அமைச்சரவையில் உள்ளார். இதனை சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள் பாஜக அரசைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!