India
”3 விரல்கள், கழுத்தில் படுகோயம்” - மாஞ்சா நூலால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்; மும்பையில் பரிதாபம்!
மும்பையின் சுனாப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னில் கைகர். இவர் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த செவ்வாய் அன்று (ஜன.,11) மாலை கைகர் அவரது நண்பர் அமோல் பவாருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கைகர் மீது மாஞ்சா நூல் பட்டிருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள கைகர் "நாங்கள் உள்நாட்டு விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தை கடக்கும்போது திடீரென ஒரு நூல் என் கழுத்தை அறுத்துவிட்டது, நான் அதை என் கையால் இழுக்க முயற்சித்தேன், ஆனால் அதனால் என் கழுத்தும் கையும் காயமுற்றது.” எனக் கூறினார்.
இதனையடுத்து பின்னால் அமர்ந்திருந்த அமோல் கைகரை மாஹிமில் உள்ள எஸ்.எல். ரஹேஜா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் கழுத்திலும் விரல்களிலும் பல தையல்கள் போடப்பட்டது.
மாஞ்சா தாக்கியதில் கைகரின் மூன்று விரல்கள் வெட்டப்பட்டு கழுத்தில் மூன்று தையல்களும், அவரது விரல்களில் இரண்டு தையல்களும் போடப்பட்டுள்ளன. பின்னர் வைல் பார்லே போலிஸார் கைகரின் வாக்குமூலத்தை பதிவு செய்ததோடு சம்பவம் நடந்த இடத்தையும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
அதில், கைகருக்கு மாஞ்சா நூலால்தான் காயம் ஏற்பட்டது உறுதியானது. இதனையடுத்து உயிரை காவு வாங்கும் மாஞ்சா நூலை கொண்டு காற்றாடி விடுவோருக்கு கடுமையான எச்சரிக்கையை போலிஸார் விடுத்துள்ளனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!