India
மும்பையில் கடத்தப்பட்ட குழந்தை.. 4 நாட்களில் தமிழ்நாட்டில் மீட்ட போலிஸ் : நடந்தது என்ன?
மும்பையைச் சேர்ந்தவர் அன்வாரி அப்துல் ஷேன். இவரது நான்கு மாத பெண் குழந்தையை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென காணவில்லை. குழந்தையை பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அன்வாரி குழந்தையைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் குழந்தை காணாமல் போன அதே தினத்தில் அன்வாரியுடன் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த இப்ராகிம் ஷேக் என்பவரையும் காணவில்லை என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து விசாரணை செய்ததில் குழந்தையை தமிழ்நாட்டில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ.4.8 லட்சத்திற்கு விற்றுவிட்டதாகக் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் குழந்தையை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக மலாடு, ஜோகேஷ்வரி, கல்யாண், தானே உட்பட 6 பேர் கொண்ட கும்பலை போலிஸார் கைது செய்தனர். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்த மும்பை போலிஸார் நான்கு நாட்கள் அந்த தம்பதிகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், மும்பையிலிருந்து கடத்தி வரப்பட்ட குழந்தையை போலிஸார் மீட்டனர். மேலும் குழந்தையை வாங்கிய தம்பதியைக் கைது செய்து விசாரணைக்காக மும்பை அழைத்துச் சென்றனர்.
மேலும் குழந்தையின் தந்தை தான்தான் என இப்ராகிம் ஷேக் போலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளதால் இருவரின் டி.என்.ஏவும் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! : ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன்!
-
கொள்கைத் தலைவர் பெரியார்.. ஆனால் பெரியார் திடலில் போலீஸ் குவிப்பு.. விஜய்க்கு ஏன் பதற்றம்? : முரசொலி!