India
"பெண் வீட்டாரிடம் எது வாங்கினாலும் அது வரதட்சணைதான்" : உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி உச்சநீதிமன்றத்தில் வரதட்சணை தொடர்பான வழக்கு ஒன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகிய மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பெண் வீட்டாரிடம் இருந்து சொத்தாகவோ அல்லது வேறு எந்த வடிவிலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் அதை வரதட்சணையாகவே கருதவேண்டும்.
பெண் வீட்டாரிடம் சொந்த வீடு கட்ட பணம் கேட்பதும் வரதட்சணைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். வரதட்சணை கொடுமைகளை வேரோடு பிடுங்க ஐ.பி.சி 304 பி பிரிவில் விரிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
பெண்களிடம் பெண்களே வரதட்சணை கேட்பது மிகவும் மோசமான செயலாகும். நீதிமன்றங்கள் வரதட்சணை வழக்குகளை விரிவான முறையில் அணுக சட்ட செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !