India
செல்போனில் கேம் விளையாடிய மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை: பதற வைக்கும் பகீர் சம்பவம்- நடந்தது என்ன?
டெல்லி நீப் சராய் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மகன் உத்கர்ஷ்(5). இவர் நேற்று மாலை செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வேலைகளை முடித்து விட்டு ஆதித்யா வீட்டிற்கு வந்துள்ளார்.
அந்நேரம் மகன் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தைப் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். பின்னர், வீட்டிலிருந்த விறகு கட்டையை எடுத்து மகனை தாக்கியுள்ளார். மேலும் சிறுவனின் கழுத்தை நெரித்ததில், உத்கர்ஷ் மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் மகனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மகனைக் கொலை செய்த தந்தை ஆதித்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!
-
ஒரு நாள் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் : பாஜகவை விமர்சித்து அவர் கூறியது என்ன ?
-
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
"அவ்வளவுதான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது" - இர்பான் பதான் கருத்து !
-
"விரைவில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" - SRH பயிற்சியாளர் நம்பிக்கை !