India
"நான் தப்பு பண்ணிட்டேன்..” : பா.ஜ.கவில் சேர்ந்து 6 நாட்களிலேயே மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பிய MLA!
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹர்கோபிந்த்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பல்வீந்தர் சிங் லட்டி கடந்த 28-ஆம் தேதி பா.ஜ.கவில் சேர்ந்தார்.
அவருடன் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ பதே ஜங் சிங் பஜ்வாவும் பா.ஜ.கவில் சேர்ந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹர்கோபிந்த்பூர் எம்.எல்.ஏ பல்வீந்தர் சிங் லட்டி, பா.ஜ.கவில் சேர்ந்த 6 நாட்களில் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
சண்டிகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் பல்வீந்தர் சிங் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
இதுகுறித்துப் பேசியுள்ள பல்வீந்தர் சிங், தனது ஆதரவாளர்களும் பொதுமக்ககளும் பா.ஜ.கவில் சேரும் தனது முடிவு குறித்து கேள்வி எழுப்பியபோது, அந்த முடிவை அவர் இரண்டாவது முறையாக யோசித்ததாகவும், தனது தொகுதியின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு பா.ஜ.கவுக்கு துளியும் இல்லை என்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "நான் இதைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்தேன், நான் தவறு செய்ததை உணர்ந்து காங்கிரஸுக்குத் திரும்ப முடிவு செய்தேன்" என பல்வீந்தர் சிங் லட்டி கூறியுள்ளார். இந்நிகழ்வு பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!