India
குடிபோதையில் மதுபானம் என நினைத்து ‘ஆசிட்’ குடித்தவர்களுக்கு நேர்ந்த கதி... திரிபுராவில் அதிர்ச்சி!
திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபிராம் ரியாங். இவரது மனைவி குழந்தையுடன் கஞ்சன்சார்ராவில் உள்ள உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இது குறித்து கணவனிடம் தெரிவித்துள்ளார். பிறகு பாபிராம் மனைவியைக் காண அங்கு வந்துள்ளார்.
இதையடுத்து அங்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் மது குடித்துள்ளனர். அப்போது குடிபோதையிலிருந்த சச்சீந்திரா ரியாங், ஆதிராம் ரியாங் பாபிராம் ரியாங் ஆகிய மூன்று பேர் மதுபானம் என நினைத்து அமிலத்தைக் குடித்துள்ளனர்.
உடனே அவர்கள் மயங்கி கீழே விழுந்துள்ளனர். விஷயம் அறிந்து உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
Also Read
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!