India

குடிபோதையில் மதுபானம் என நினைத்து ‘ஆசிட்’ குடித்தவர்களுக்கு நேர்ந்த கதி... திரிபுராவில் அதிர்ச்சி!

திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபிராம் ரியாங். இவரது மனைவி குழந்தையுடன் கஞ்சன்சார்ராவில் உள்ள உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இது குறித்து கணவனிடம் தெரிவித்துள்ளார். பிறகு பாபிராம் மனைவியைக் காண அங்கு வந்துள்ளார்.

இதையடுத்து அங்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் மது குடித்துள்ளனர். அப்போது குடிபோதையிலிருந்த சச்சீந்திரா ரியாங், ஆதிராம் ரியாங் பாபிராம் ரியாங் ஆகிய மூன்று பேர் மதுபானம் என நினைத்து அமிலத்தைக் குடித்துள்ளனர்.

உடனே அவர்கள் மயங்கி கீழே விழுந்துள்ளனர். விஷயம் அறிந்து உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

Also Read: ’தகன மேடையில் தீ வைக்கச் சென்றபோது கண் விழித்த முதியவர்’ - அரண்டு போன உறவினர்கள்; டெல்லியில் விநோதம்!