India
"ஆட்சிக்கு வந்தால் ரூ.70க்கு மதுபானம்".. ஆந்திர பா.ஜ.க தலைவரின் சர்ச்சைப் பேச்சு!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இம்மாநில பா.ஜ.க தலைவர் சோமு வீரராஜூ கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய சோமு வீரராஜூ" ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சி ஆதரவுடன் தரமற்ற மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
2024ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவை வெற்றி பெற செய்தால் 70 ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்படும். மேலும் இதில் வருவாய் அதிகரித்தால் ரூ.50க்கும் மதுபானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் சோமு வீரராஜூவின் இந்தப் பேச்சு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தான் பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதியா? என பெண்கள் அமைப்பினர் கேள்வி எழுப்பிக் கண்டித்துள்ளனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!