India
“போலி அதிகாரிகள் மிரட்டல்.. இளம் நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்” : விசாரணையில் அதிர்ச்சி தகவல் !
மும்பையில் உள்ள ஜோகேஷ்வரி பகுதியைச் சேர்ந்த இளம் நடிகை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி ஒன்றிற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இரண்டு நபர்கள் தங்களைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என கூறி, 'போதைப் பொருள் பயன்படுத்தியதால் உங்களைக் கைது செய்தாக' நடிகையிடம் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அதிகாரிகள் என கூறிவந்தவர்கள் ரூ.40 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு இவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது என கூறியதை அடுத்து ரூ.20 லட்சம் தரவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
பிறகு வீட்டிற்கு வந்த நடிகை, இவ்வளவு பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பார்டிக்கு நடிகையுடன் சென்ற நண்பர்களை போலிஸார் விசாரணை செய்தனர். அப்போது நடிகையுடன் பார்டிக்கு சென்ற ஆசிர் காஜி என்பவர் தான், தனது நண்பர்களை வைத்து போதைப்பொருள் அதிகாரிகள் என கூறி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! : ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன்!
-
கொள்கைத் தலைவர் பெரியார்.. ஆனால் பெரியார் திடலில் போலீஸ் குவிப்பு.. விஜய்க்கு ஏன் பதற்றம்? : முரசொலி!