India
"பிரச்சாரத்திற்கு தடை - உ.பி தேர்தலை தள்ளிவையுங்கள்" : பிரதமருக்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நடைபெறும் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்று வருகிறார்கள்.
இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரங்களே ஒமைக்ரான் பரவலுக்கு வழிவகுத்துவிடுமோ என்று அஞ்சப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவியதற்கு ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.
இதனால் கொரோனா இரண்டாவது அலை பரவியதைப்போல் ஒமைக்ரானை பரவிடாமல் தடுக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கும், பிரதமர் மோடிக்கும் வலியுறுத்தியுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் நீதிபதி சேகர் குமார் யாதவ், "ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்.
இல்லை என்றால் கொரோனா இரண்டாவது அலை பரவியதைப் போலவே ஒமைக்ரான் தொற்றும் பரவ வாய்ப்புள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்ளை இணையவழியில் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையமும், பிரதமர் மோடியும் முடிவெடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!