India
இரும்பு பீரோவில் ரூ.150 கோடி.. அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை : ரெய்டில் சிக்கிய தொழிலதிபர்!
உத்தர பிரதே மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைக் குவித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிரடியாகச் சோதனை செய்தனர். மேலும் கான்பூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அப்போது இரும்பு பீரோவில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இரும்பு பீரோவில் இருந்த பணம் ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலையிலிருந்தே அந்த பணத்தை அதிகாரிகள் எண்ண முடியாமல் எண்ணி வருகின்றனர்.
சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரூ.150 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!