India
இரும்பு பீரோவில் ரூ.150 கோடி.. அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை : ரெய்டில் சிக்கிய தொழிலதிபர்!
உத்தர பிரதே மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைக் குவித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிரடியாகச் சோதனை செய்தனர். மேலும் கான்பூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அப்போது இரும்பு பீரோவில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இரும்பு பீரோவில் இருந்த பணம் ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலையிலிருந்தே அந்த பணத்தை அதிகாரிகள் எண்ண முடியாமல் எண்ணி வருகின்றனர்.
சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரூ.150 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!