India
தொலைந்துபோன செல்போன்.. விரக்தியில் விபரீத முடிவு எடுத்த பெண்!
பீகார் மாநிலம், கஜாஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் பிட்டு சிங். இவரது மனைவி கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது, வெளியே விளையாட சென்றிருந்த பிட்டு சிங்கின் மகன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது தாய் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து தந்தைக்குச் சிறுவன் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த பிட்டு சிங் போலிஸாருக்கு நடந்த வற்றை தெரிவித்துள்ளார். பிறகு போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செல்போன் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனால் அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனால் இவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலிஸார் அந்த பெண்ணின் கணவர் உட்படப் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!