India
இந்தியாவில் ஜனவரியில் ஒமைக்ரான் அலை? - தொற்றுநோய் நிபுணர் எச்சரிக்கை!
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபான ஒமைக்ரான் தொற்று தற்போது உலகின் 80 நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலும் 111 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு இந்த தொற்றை உலக நாடுகள் எச்சரிகையுடன் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
மேலும் ஒமைக்காரன் தொற்று குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொற்று ஜனவரி, பிப்ரவரியில் வேகமாகப் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் கோழிக்கோட்டில் அமைந்துள்ள கே.எம்.சி.டி மருத்துவக் கல்லூரியில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு குறித்து இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தொற்றுநோய் நிபுணர் நரேஷ் புரோகித், "ஒமைக்ரான் தொற்று டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியது. இந்தியாவில் டிசம்பர் 2ஆம் தேதி இரண்டு 2 பேருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று இருந்தது.
டிசம்பவர் 14ம் தேதி 45 பேருக்குத் தொற்று பரவியது. 14 நாளில் மட்டும் 36 மடங்கு ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதனால் ஒமைக்ரான் நோயாளி சூப்பர் ஸ்பிரடர் ஆக மாறி, ஒமைக்ரானை பரப்பலாம். இதன் காரணமாக, ஜனவரியில் ஒமைக்ரான் அலை வீசக்கூடும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?