India
‘போதும்பா சாமி உங்க அரசியல்’ : பா.ஜ.க.,வின் மோசமான நிலைப்பாடுகளால் அரசியலிலிருந்து வெளியேறிய மெட்ரோ மேன்!
கேரளாவில் நடத்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க ஒரு தொகுதி கூட பெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது. இந்த தேர்தலில் எப்படியாது அதிக தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் பணபலத்துடன் பிரபலங்கள் பலரையும் பா.ஜ.கவில் இணையவைத்துத் தேர்தலைச் சந்தித்தது.
கேரளாவில் மக்கள் எல்லோருக்கும் அன்போடு மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் என்பவரை பா.ஜ.க இணைத்துக்கொண்டது. இவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். இந்நிகழ்வை பா.ஜ.க தேர்தல் அரசியலுக்காக பிரம்மாண்டமாக நடத்தியது. இவரின் இணைப்பை அடுத்து பா.ஜ.கவில் இணைந்தவுடன் இவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பேச்சும் அடிபட்டது.
இவரின் பிரபலத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற நினைத்தது. ஆனால் ஸ்ரீதரன் போட்டியிட்ட பாலக்காடு தொகுதியிலேயே அவர் படுதோல்வியடைந்தனர். 3859 வாக்குகள் மட்டுமே மெட்ரோ மேன் ஸ்ரீதரனால் பெற முடிந்தது.
பின்னர் தொடர்ந்து பா.ஜ.கவில் செயல்பட்டு வந்த நிலையில் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம், “நான் தீவிர அரசியலில் இனி ஈடுபடப்போவதில்லை. அரசியலைக் கைவிடக் காரணம் எனக்கு அதில் விருப்பமில்லை. நான் எப்போதும் அரசியல்வாதியாக இருந்ததில்லை. தேர்தலில் முதல்முறையாகப் போட்டிப்போட்டுத் தோற்றது வருத்தமாக இருந்தது. வெற்றி பெற்றிருந்தாலும் பயன் இருந்திருக்கப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?