India
ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து.. 9 பேர் பலி - பல உயிர்களைக் காப்பாற்றிய மீனவர்கள்: நடந்தது என்ன?
ஆந்திரா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்திலிருந்து மேற்கு கோதாவரியில் உள்ள ஜங்காரெட்டிகுடெம் நோக்கி இன்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இதையடுத்து பேருந்து ஏலூர் அருகே உள்ள ஆற்றுப்பாலத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஆற்று நீரில் சிக்கிக் கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பக்கத்துக் கிராமத்திலிருந்த மீனவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் மற்றும் மீட்புக்குவினர் மீனவர்களுடன் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்தவர்களை மீட்டு படகுகள் மூலம் கரைக்கு அழைத்துச் சென்றனர்.
இருந்தபோதும் இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!