India

பார் உரிமையாளரால் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி - நடந்தது என்ன?

டெல்லியில் பிரபல மால் ஒன்றிலிருந்து இளம்பெண் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ரோகினி ப்ரசாந்த் விகார் பகுதியில் மால் ஒன்றில் உள்ள பாரில் 21 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை அந்த மாலின் அடித்தளத்தில் சடலமாகக் கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்தனர்.

மேற்கொண்டு விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அப்பெண்ணின் குடும்பத்தினர் நேபாளத்தில் வசித்து வருகின்றனர். அந்தப் பெண் டெல்லியில் உள்ள மால் ஒன்றின் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பார் உரிமையாளர் அப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியுள்ளார். நடனமாட விருப்பமில்லாத நிலையில் அப்பெண் மாலின் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார்.

பாரில் உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றிய காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

- உதயா

Also Read: “விபத்தல்ல.. திட்டமிட்ட சதி”: புலனாய்வுக் குழு அளித்த அதிர்ச்சி அறிக்கை- சிக்கும் பா.ஜ.க அமைச்சரின் மகன்!