India
பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற தாய் : போலிஸ் விசாரணை - நடந்தது என்ன?
கேரள மாநிலம், திருவல்லா அடுத்த முண்டக்காயம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் நிஷா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து அவருக்குக் கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து வீட்டின் குளியல் அறையில் பிறந்த ஆண் குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
குடும்ப வறுமையால் ஐந்து குழந்தைகளை வளர்ப்பதிலேயே நிஷாவுக்குச் சிரமம் இருந்துள்ளது. இதில் ஆறாவதாக ஒரு குழந்தை பிறந்ததால் அவர் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தையை வீட்டின் கழிவறையில் உள்ள தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!