India
பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற தாய் : போலிஸ் விசாரணை - நடந்தது என்ன?
கேரள மாநிலம், திருவல்லா அடுத்த முண்டக்காயம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் நிஷா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து அவருக்குக் கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து வீட்டின் குளியல் அறையில் பிறந்த ஆண் குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
குடும்ப வறுமையால் ஐந்து குழந்தைகளை வளர்ப்பதிலேயே நிஷாவுக்குச் சிரமம் இருந்துள்ளது. இதில் ஆறாவதாக ஒரு குழந்தை பிறந்ததால் அவர் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தையை வீட்டின் கழிவறையில் உள்ள தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!