India
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் வீராங்கனை : சகவிளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுர் சந்த். இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இவர் தேசிய, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனைப்படைத்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து கவுர் சந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 64வது தேசிய துப்பாக்கிச்சூடு போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.
இதனால் சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தோல்வியால், கவுர் சந்த் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!
-
”பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்பு” : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி கண்டனம்!
-
+2 தேர்வு : எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை சதவீதம் தேர்ச்சி? - புள்ளி விவரங்களோடு பட்டியல் வெளியீடு !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !