India
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் வீராங்கனை : சகவிளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுர் சந்த். இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இவர் தேசிய, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனைப்படைத்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து கவுர் சந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 64வது தேசிய துப்பாக்கிச்சூடு போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.
இதனால் சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தோல்வியால், கவுர் சந்த் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!