India
தடுப்பூசி போட வந்தவர்களை திட்டிய கிராமத்தினர்; விசாரிக்காது ஆஷா பணியாளர்களை அழைத்துச் சென்ற புதுவை போலிஸ்
புதுச்சேரி ஏம்பலம் கரிகளாம்பாக்கத்தில் பெண் ஆஷா பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் வீடு வீடாகச் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆஷா பணியாளர்கள் கூறிய நிலையில், குறிப்பிட்ட வீட்டில் இருந்த நபர்கள் ஆஷா பணியாளர்களை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்காமல், ஆஷா பணியாளர்களை கிராமப்புற போலிஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு புதுச்சேரி மாநில ஒட்டுமொத்த ஆஷா பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திரளான ஆஷா பணியாளர்கள் புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துறையின் உத்தரவின் பேரில் தான் நாம் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளோம், ஆனால் பாதுகாப்பற்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.
எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!