India
தடுப்பூசி போட வந்தவர்களை திட்டிய கிராமத்தினர்; விசாரிக்காது ஆஷா பணியாளர்களை அழைத்துச் சென்ற புதுவை போலிஸ்
புதுச்சேரி ஏம்பலம் கரிகளாம்பாக்கத்தில் பெண் ஆஷா பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் வீடு வீடாகச் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆஷா பணியாளர்கள் கூறிய நிலையில், குறிப்பிட்ட வீட்டில் இருந்த நபர்கள் ஆஷா பணியாளர்களை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்காமல், ஆஷா பணியாளர்களை கிராமப்புற போலிஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு புதுச்சேரி மாநில ஒட்டுமொத்த ஆஷா பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திரளான ஆஷா பணியாளர்கள் புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துறையின் உத்தரவின் பேரில் தான் நாம் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளோம், ஆனால் பாதுகாப்பற்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.
எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!
-
கிராண்ட் ஸ்லாம் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது.. கோடிகளில் பரிசுத் தொகை.. களமிறங்கும் முன்னணி வீரர்கள்!
-
திமுக தலைவருக்கான பாதுகாப்பு குறைப்பு.. தவெக அரசின் அரசியல் உள்நோக்கமா? : தலைவர்கள் கடும் கண்டனம்!